அய்யய்யோ எங்க எம்.எல்.ஏ.வை காணோம்... செந்தில் பாலாஜியை கண்டுபிடித்து தர கோரி போலீசில் புகார்
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை கண்டுபிடித்து தர கோரி போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கரூர்: அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியை காணவில்லை என அதிமுக பேரூராட்சி செயலாளர்கள் 4 பேர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி நேற்று அதிமுக கரூர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கரூரில் கொண்டாடினர்.

இந்நிலையில் வேலாயுதம்பாளையம் போலீசில் அதிமுக பேரூராட்சி செயலாளர்கள் 4 பேர் இன்று ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில், எங்களது அரவக்குறிச்சி தொகுதி எம்.ல்.ஏவான செந்தில் பாலாஜியை கடந்த சில நாட்களாக காணவில்லை. கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக புதுவையில் விண்ட் ப்ளவர் சொகுசு ரிசார்ட்டில் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து முகாமிட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications