செந்தில் பாலாஜியின் நண்பரின் நிதி நிறுவனத்துக்கு சீல்.. உறவினர்களின் ரூ.60 கோடி வரிஏய்ப்பு அம்பலம்
செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான நிதி நிறுவனத்துக்கு வருமான வரித் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பருக்குச் சொந்தமான நிதி நிறுவனத்துக்கு வருமான வரித் துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி. அவர் தினகரனின் தீவிர ஆதரவாளராவார். முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்று கூர்கில் இருந்து வந்தார். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜியின் பதவி பறிபோனது.

இந்நிலையில் ஜெயலலிதா அமைச்சரவையில் கடந்த 2011-2016 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு, கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாள்களாக சோதனை நடத்தி வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்துக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறையினர் அறிவிப்பர்.
கரூரில் அரசு ஒப்பந்ததார் சங்கர் வீட்டிலும், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் ரூ.60 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications