ஆந்திராவை போல இரண்டாக பிரிகிறதா கர்நாடகா? கொடியேற்றி மிட்டாய் கொடுத்தாச்சில்ல
பெங்களூர்: ஆந்திராவை போல கர்நாடகாவையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க துவங்கியுள்ளன.
தென் கர்நாடகாவில் பெங்களூர், மைசூர், தும்கூர் உள்ளிட்ட பகுதிகள் நீர் வளம் மற்றும் தொழில் வளத்தால் மேம்பட்டுள்ளன.
ஆனால், பெல்காம், பிஜாப்பூர், பீதர் உள்ளிட்ட வட கர்நாடக மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியின்றி காணப்படுகின்றன. வட கிழக்கு கர்நாடக மாநிலங்கள் கடும் வறட்சியால் குடிநீருக்கும் கஷ்டப்படும் சூழல் உள்ளது.

செழிப்பான மாவட்டங்கள்
தெற்கு, மேற்கு மலையோர மாவட்டங்கள் செழுமையாக உள்ள நிலையில், வட கிழக்கு மாவட்டங்கள் வறட்சியை போக்க இதுவரை எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொழில் வளர்ச்சிக்கும் முன்னுரிமை தரவில்லை. இதையடுத்து வட கர்நாடகாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முணுமுணுப்பாக ஆரம்பித்து இப்போது, பெரும் கோஷமாக உருமாறத் தொடங்கியுள்ளது.

இணைந்த அமைப்புகள்
24 அமைப்புகளை ஒன்றாக்கி, வட கர்நாடகாவை தனி மாநிலமாக அறிவிக்க அமைப்பு ஒன்று உருவாகியுள்ளது. இதன் தலைவர் சோமசேகர் கொடாம்பரி கூறுகையில், மொத்தம் 13 வட கர்நாடக மாவட்டங்களை இணைத்து தனி மாநில அந்தஸ்து கேட்கிறோம். ஆகஸ்ஸட் 2ம் தேதி இதற்காக வட கர்நாடகாவில் பந்த் நடத்த உள்ளோம் என்றார்.

மடாதிபதிகள் கைகோர்த்தனர்
இதேபோல வட கர்நாடகாவை சேர்ந்த மடாதிபதிகள் இன்று பெல்காமிலுள்ள சட்டசபை கட்டிடம் எதிரேக அடையாள போராட்டம் நடத்தினர். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வட கர்நாடக மாவட்டங்களை நடத்த கூடாது என அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். பாஜகவை சேர்நதவரும் ரெட்டி சகோதரர்களின் நண்பருமான முலக்கல்முரு எம்எல்ஏ ஸ்ரீராமலுவும் தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொடியேற்றல்
இதனிடையே பெல்காமில் இன்று, தனி மாநில கொடியை போராட்ட குழு ஏற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகா தனக்காக ஒரு கொடியை சித்தராமையா ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்தது. ஆனால் இப்போது, வட கர்நாடக மக்கள், அவர்களுக்கு தனி கொடியை அறிவிக்க முற்பட்டுள்ளனர். இந்த பிரிவினை கோஷம் இந்திய அளவில் பரபரப்பாகியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications