புதுவை மின்துறை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி திடீர் ஆய்வு- 'லேட்' ஊழியர்களுக்கு கடும் வார்னிங்
புதுச்சேரி: மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியின் முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்ற பின்னர் அரசின் பல்வேறு துறைகளுக்கு திடீரென சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி வணரப்பேட்டையில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலகண்ணன் ஆகியோர் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று காலை 8.45 மணியளவில் மின்துறை அலுவலகத்திற்கு வந்தபோது 50 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. 9.15 ஆன பின்னும் பலர் பணிக்கு வரவில்லை. எனவே இது குறித்து அதிகாரிகள் கண்காணித்து, பணிக்கு உரிய நேரத்தில் வராத ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்.
குருமாம்பேட், மேட்டுப்பாளையம், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் துணை மின்நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். மத்திய அரசு மின்துறைக்கு பல திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்கள் மூலம் நிதி பெற்று மின்துறையை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக மத்திய மின்துறை அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
முழுமையான மின்சாரம் வழங்கினால் புதிய தொழில்கள் தொடங்கப்படும் என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உபரியாக உள்ள மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன். மின்துறையை லாபத்தில் இயங்கச் செய்வதற்காக திட்டங்களை ஏற்படுத்தும்படி கூறியுள்ளேன்.
மின் கசிவை 2 மாதத்திற்குள் சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். 24 மணிநேரமும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறினார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications