புதுவை மின்துறை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி திடீர் ஆய்வு- 'லேட்' ஊழியர்களுக்கு கடும் வார்னிங்
புதுச்சேரி: மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியின் முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்ற பின்னர் அரசின் பல்வேறு துறைகளுக்கு திடீரென சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி வணரப்பேட்டையில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலகண்ணன் ஆகியோர் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று காலை 8.45 மணியளவில் மின்துறை அலுவலகத்திற்கு வந்தபோது 50 சதவீதத்திற்கும் மேலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. 9.15 ஆன பின்னும் பலர் பணிக்கு வரவில்லை. எனவே இது குறித்து அதிகாரிகள் கண்காணித்து, பணிக்கு உரிய நேரத்தில் வராத ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்.
குருமாம்பேட், மேட்டுப்பாளையம், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் துணை மின்நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். மத்திய அரசு மின்துறைக்கு பல திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்கள் மூலம் நிதி பெற்று மின்துறையை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக மத்திய மின்துறை அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
முழுமையான மின்சாரம் வழங்கினால் புதிய தொழில்கள் தொடங்கப்படும் என தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உபரியாக உள்ள மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன். மின்துறையை லாபத்தில் இயங்கச் செய்வதற்காக திட்டங்களை ஏற்படுத்தும்படி கூறியுள்ளேன்.
மின் கசிவை 2 மாதத்திற்குள் சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். 24 மணிநேரமும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications