இவ்வளவு பெரிய புயலிலும் அசையாத ஜெயலலிதா சமாதி மேற்கூரை! மணல் மூட்டை போட்டு வெள்ளம் புகாமல் தடுப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குள் தண்ணீர் புகுந்துவிடாமல் தடுக்க அதிகாரிகள் படாதபாடு பட்டனர்.
சென்னை: வர்தா புயல் சென்னை மற்றும் திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை பயங்கர அளவில் தாக்கியது. இதனால் கடற்கரை பகுதி வீடுகள் தண்ணீரில் மூழ்கியது.
அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியது. இதனால் கடற்கரை அருகேயுள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. சில வாகனங்கள் நீரில் மூழ்கிவிட்டது.

22 வருடங்களுக்கு பிறகு சென்னையை ஒரு புயல் கடந்தது என்றால் அது வர்தாதான். எனவே சமீபத்தில்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சமாதி அமைந்துள்ள இடத்தில் வெள்ளம் புகுந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
எனவே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சமாதியை சுற்றிலும் மணல் மூட்டை அடுக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு வேகமாக காற்று வீசியபோதும், ஜெயலலிதாவின் சமாதிக்கு மேலுள்ள மேற்கூரை ஆடவோ, அசையவோ இல்லை. அதற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதனிடையே, பொதுமக்கள் இன்று வழக்கம்போல ஜெயலலிதா சமாதி இருக்கும் இடத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று சென்னை மாவட்டத்தில் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications