நிலம் புயலை விட பயங்கரமான புயல் வருது…. ஆந்திராவை தாக்குமாம்!
சென்னை: அந்தமான்- நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2011ம் டிசம்பரில் தானே புயலின் கோரத்தாண்டத்தில் கடலூர் மாவட்டம் சிக்கி முற்றிலும் சேதமடைந்தது
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவான‘நிலம்' புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆந்திராவை தாக்கும்
தற்போது உருவாகி வரும் புதிய புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆந்திராவில் கரை கடக்க வாய்ப்புள்ளது. இன்னும் சில தினங்களில் புயல் ஆந்திராவை தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வலிமையான புயல்
இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிமையாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
24 மணி நேரத்தில்
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த புயல் சின்னம் தீவிரம் அடையும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும். அதை தொடர்ந்து புயல் தாக்கலாம் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தவாரம் தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் அதன் அறிகுறியாக புயல்சின்னம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.