என் ஓட்டு சரத்குமாருக்கு.. விஷாலுக்கு வாழ்த்து மட்டும் - நடிகை ஷகீலா அதிரடி
மதுரை: சரத்குமார் அணிக்கே நான் வாக்களிப்பேன் என்று கவர்ச்சி நடிகை ஷகீலா அறிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும் பரபரப்பு தொடர்கிறது.
இந்த நிலையில் மதுரைக்கு வந்த நடிகை ஷகீலா நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நான் சரத்குமார், ராதாரவிக்கு தான் வாக்களிப்பேன். அவர்கள் சங்கத்திற்கு நிறைய செய்திருக்கிறார்கள். விஷாலுக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்திய திருநங்கைகளின் மாபெரும் கலைவிழா ஜூலை 26ம் தேதி மதுரை விக்டோரியா அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நான் கலந்து கொள்கிறேன். மேலும் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.
பாரதி கண்ணம்மா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த விழாவில் திருநங்கைகளின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகம் மற்றும் பல்வேறு மாநில கலாச்சார ஆடை அணிவகுப்பு போன்றவை இடம் பெறுகின்றன. சிறு வயதிலிருந்தே எனக்கு அம்மா, அப்பா ஆதரவு இல்லை. அப்போது திருநங்கைகள் தான் ஆதரவு அளித்தனர். எனவே அவர்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்தார் ஷகீலா.
சரத் அணிக்கு கிடைத்திருப்பது மிகப் பெரிய ஆதரவுதான்.












Click it and Unblock the Notifications