சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை!
சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video
சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி தமிழகம் முழுக்க பிரபலம். இந்த ஐஏஎஸ் அகாடமியில் பலர் படித்து வருகிறார்கள்.
பல ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளை உருவாக்கிய சிறப்பு இந்த நிறுவனத்தை சேரும். அதேபோல் பல அரசு அதிகாரிகளை இந்த கல்வி நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த நிலையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
[அச்சே தீன்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் அதிகரித்தது!]
குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது. இவருக்கு 45 வயது ஆகிறது. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.