அச்சே தின்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் அதிகரித்தது!
இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
தினமும் காலையில் ராசிபலன் சொல்வது போல தவறாமல் பெட்ரோல் டீசல் விலை ஏறிவிடுகிறது. ராசிபலனிலாவது ஏதாவது நல்லது சொல்வார்கள், ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் எந்த நல்ல செய்தியும் வருவதில்லை.
தற்போது வேகமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
[ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்.. ஸ்டாலின் உறுதி!]
நேற்று என்ன விலை
நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 29 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.81 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 79.20 காசுகளாக விற்கிறது.
இன்று விலை
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 30 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.80 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.91 காசுகளாக விற்கிறது.
ஏன் குறைத்தனர்
கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனால் அனைத்து மாநிலங்களிலும் ரூபாய்ப் 2.50 பெட்ரோல், டீசல் விலையில் குறைக்கப்பட்டது. ஆனால் இப்படி தினமும் விலையை ஏற்ற ஏன் அப்போது குறைத்தார்கள் என்று தெரியவில்லை.
மோசமான வரிவிதிப்பு
மத்திய அரசு தான் முதலில் குறைத்த வரியை எல்லாம் தொடர்ந்து ஏற்றிக்கொண்டு வருகிறது. விலைகுறைப்பிற்கு அடுத்த வந்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் விலையை தொடர்ந்து ஏற்றிக்கொண்டு வருகிறது.