1000 ரூபாயா வச்சிருக்கீங்க... மை வைக்கிறேன்!
திருடனுக்கு தேள் கொட்டிய கதை தெரியும்... திருடன் ஒருவன் திருட வந்த வீட்ல இருந்தவங்களுக்கு மை வச்ச கதை தெரியுமா?
சென்னை: 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்ததுதான் தாமதம். மூட்டை மூட்டையாக பணத்தை கட்டி வைத்திருந்தவர்கள் பாடு பெரும்பாடகிவிட்டது. திருடர்கள் பாடுதான் படு திண்டாட்டமாகிவிட்டது. இதைப் பற்றி வாட்ஸ் அப்பில் நகைச் சுவையாக ஒரு குட்டி கதை உலா வருகிறது.
ஒரு திருடன் ஒரு வீட்டில் திருடப் போனான். அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். முழித்து விடக்கூடாதே என்று மயக்க மருந்து ஸ்பிரேவை அடித்தான். லாக்கரை திறந்து நகை, பணம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான்.

பீரோ லாக்கர் முழுவதும் கட்டு கட்டாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தன. கடுப்பான திருடன் நேராக உறங்கிக் கொண்டிருந்தவர்களிடம் வந்தான். இடது கை ஆள்காட்டி விரலை எடுத்து அழியாத மையை வைத்து விட்டு ஓடியே போய் விட்டான்.
நீதி: நமக்கு பயன்படாத பணம் வேற யாருக்கும் பயன்படக்கூடாது.












Click it and Unblock the Notifications