'பீப் பாய்' சிம்பு எந்த நேரத்திலும் கைதாகலாம்!

Subscribe to Oneindia Tamil

ஆபாச பீப் பாடலை உருவாக்கி, பாடி, அது எனது தனிப்பட்ட விஷயம் என்று பிடிவாதமாக பேட்டி கொடுத்துள்ள சிம்புவைக் கைது செய்ய எந்தத் தடையும் என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்டதால், சிம்புவை எந்த நேரமும் போலீசார் கைது செய்யும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் சிம்புவின் குடும்பத்தினர் பதட்டமடைந்துள்ளனர். சிம்பு ரகசியமான இடத்தில் பதுங்கியுள்ளார்.

Simbu at arrest risk

பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில், சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

வழக்கு விசாரணை

பிற்பகலில் மீண்டும் வழக்கை விசாரித்ததில் ஜனவரி 4-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி.

அதே நேரம் பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவைக் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என சென்னை நீதிபதி ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டார்.

இதனால் சிம்பு எந்த நேரமும் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருக்கும் சிம்பு, தனக்கு எந்த பயமும் இல்லை என்றும், சட்ட நடவடிக்கைகளைச் சந்திப்பேன் என்றும் கூறி வருகிறார். போலீஸின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பாரா அல்லது இப்போதுள்ள தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்வாரா என்பது இன்று நள்ளிரவோ நாளையோ தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+