தெரு முனைகளில் திரளுங்கள்.. நாம் யாரென்று காட்டுவோம் - சிம்பு அழைப்பு
தெரு முனைகளில், முக்கிய சந்திப்புகளில் திரண்டு மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்த நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தெரு முனைகளில் மக்கள் திரண்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், மாணவ, மாணவியர், பெண்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்காக உரத்துக் குரல் கொடுத்து தமிழகத்தையே அதிர வைத்தனர். இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தனர். இதையடுத்து நடிகர் சிம்பு தனது வீட்டின் முன்பு நடத்திய மவுனப் போராட்டம், தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஆர்ப்பரிக்க வைத்தது.

தமிழகம் முழுவதும் தற்போது போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு இன்னொரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் அமர்ந்து தொடர் போராட்டங்களை நடத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாம் யாரென்று காட்டுவோம், ஜல்லிக்கட்டு தடை நீங்கும் வரை போராடுவோம் என்றும் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ அழைப்பு:
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications