For Daily Alerts
Just In
பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக கைதாகமாட்டேனா? சிம்பு
நாட்டுக்காக மாட்டுக்காக கைதாகவும் தயார் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சிம்புவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று வாழ்த்தினார்.
சென்னை: பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக நான் கைதாகமாட்டேனா என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு தம்முடைய குடும்பத்தினருடன் நேற்று வீட்டு முன்பாக 10 நிமிட மவுன போராட்டம் நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சிம்பு போராட்டம் நடத்திய அதே நேரத்தில் பல பகுதிகளிலும் மவுன போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தை நடத்திய சிம்புவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று கட்டித் தழுவி வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக கைதாகமாட்டேனா? ஒரு படம் வெளியாகும் முன்னரே அதன் கதையை கேட்பது போல அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்க வேண்டாம் என்றார்.
Comments
English summary
Actor Simbu said that he will ready to face any arrest for Jallikattu issue.
Story first published: Friday, January 13, 2017, 9:53 [IST]