நெல்லையில் பட்டப் பகலில் கைதி கொலை- 3 வாகனங்கள் பறிமுதல்
தூத்துக்குடியைச் சேர்ந்த சிங்காரம் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து சென்றபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரிடம் விசாரணை மேற்க
நெல்லை: தூத்துக்குடியைச் சேர்ந்த கைதி சிங்காரம் கொலை வழக்கில் மர்மநபர்கள் பயன்படுத்திய 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் வழக்கு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த பல படுகொலைகளில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சிங்காரம் என்ற கைதியை, பாளையங்கோட்டை சிறையிலிருந்து நேற்று காலை காவல்துறை வாகனத்தில் போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது சிறையிலிருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே மூன்று ஜீப்புகளில் வந்த கும்பல், காவல்துறை வாகனத்தின் மீது தங்கள் வாகனத்தை மோதி தடுமாற வைத்தது.

காவல்துறை வாகனத்தில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் மீது மிளகாய்ப் பொடி மற்றும் தண்ணீரை வீசி நிலைகுலையச் செய்தனர். பின்னர் கைதி சிங்காரத்தை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்த கொலையில் பயன்படுத்திய வாகனங்களை தாழையூத்து, ரெட்டியார்பட்டி, சாயர்புரம் ஆகிய பகுதியில் போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications