4 குடும்ப நல நீதிமன்றங்கள்; 384 வழக்குகள்; இருப்பதோ ஒரே ஒரு நீதிபதி - இது சென்னை ஹைகோர்ட் நிலைமை!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4 குடும்பநல நீதிமன்றங்களில் உள்ள 384 வழக்குகளும் ஒரே நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 4 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. இதில் 2 நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.

முதலாவது மற்றும் இரண்டாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றங்களில் நீதிபதிகள் சாருஹாசினி, கலைமதி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் நீதிபதி இல்லாத 2 நீதிமன்றங்களின் வழக்குகளை சேர்த்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குடும்ப சூழ்நிலையின் காரணமாக நீதிபதி கலைமதி திடீர் விடுப்பில் சென்று விட்டார்.
இதனால் நேற்று 4 குடும்பநல நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த அனைத்து வழக்குகளையும், ஒரே நீதிபதியான சாருஹாசினி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 300க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே நீதிபதி ஒரே நாளில் விசாரிப்பது சாத்தியமற்றது என்பதால் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
2 ஆவது நாளான இன்றும் 4 நீதிமன்றங்களில் உள்ள 384 வழக்குகள் நீதிபதி சாருஹாசினி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 4 நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால், அங்கு கூட்டம் குவிந்தது. வழக்கம்போல, பெரும்பாலான வழக்குகள் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இதனால் வழக்கிற்காக வரும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications