குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் வந்தால் ஒய்ன்ன்ன்... னு சவுண்ட் வரும்! சென்னை ஐஐடி அசத்தல்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மழை காலங்களில் இந்த குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் கொட்டும்.

இதனால் சுற்றுலா பயணிகளின் கோடை சாய்ஸில் குற்றாலம் எப்போதும் இருக்கும். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக வந்து ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பு நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீரானது , வெள்ளியை உருக்கியது போல் வந்து விழுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழைய குற்றால அருவியில் திடீரென அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நெல்லையை சேர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து குற்றால அருவிகளில் மறுஅறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவி, பிரதான அருவி, ஐந்தருவியில் ஐந்தருவி மட்டும் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீர் வரத்து கண்காணிப்பு, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பிரதான அருவி, பழைய அருவி ஆகிய இரு அருவிகளையும் வனத்துறையினர் வசம் ஒப்படைக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுப் பணித் துறை , மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு அருவிகளும் அடுத்த இரு தினங்களுக்குள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் திடீர் காட்டாற்று வெள்ளத்தை கண்காணிக்க சென்சார்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்சார் அமைப்பதற்காக சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அருவி பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த குழு தயாரித்த சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதிகளில் பொருத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளம், கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் கருவிகளை வைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications