மைல் கல்லை கட்டி அணையில் வீசப்பட்ட சிவமூர்த்தி உடல்.. கல் சிறியதாக இருந்ததால் மிதந்த சடலம்
மைல்கல்லைக் கட்டி வீசப்பட்ட தொழிலதிபர் சிவமூர்த்தியின் சடலம் கெலவரப்பள்ளி அணையில் மிதந்தது.
Recommended Video

ஓசூர் மைல்கல்லைக் கட்டி கெலவரப்பள்ளி அணையில் வீசப்பட்ட தொழிலதிபர் சிவமூர்த்தியின் சடலம் கல் சிறியதாக இருந்ததால் மிதந்தது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவன தொழிலதிபர் சிவமூர்த்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
இந்நிலையில் சொகுசு கார் ஆம்பூர் டோல்கேட்டை அடிக்கடி கடந்து சென்றதால் சந்தேகமடைந்த டோல்கேட் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடத்தி கொலை
இதையடுத்து காரை பிடித்த போலீசார் அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் திருப்பூர் தொழிலதிபர் சிவமூர்த்தியின் கார்தான் அது என்பதும் அவரை கடத்தி கொலை செய்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவமூர்த்தியை கொலை செய்ததும் உடலை கெலவரப்பள்ளி அணையில் வீசியதும் தெரியவந்தது.

மைல்கல்லை கட்டி..
உடல் மிதக்காமல் இருக்க கொலையாளிகள் சாலையோர மைல்கல்லை சிவமூர்த்தி உடலுடன் கட்டி கெலவரப்பள்ளி அணையில் வீசியுள்ளனர். ஆனால் கல் சிறியதாகவும் எடை குறைவாகவும் இருந்ததால் உடல் இன்று அணையில் மிதந்தது.

போலீஸ் விசரணை
இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினரான தொழிலதிபர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்டு உடல் அணையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேப் ஒட்டப்பட்டுள்ளது
சிவமூர்த்தியின் கை கால்கள் கட்டப்பட்டுள்ளது. முகம் மற்றும் உடல் முழுவதும் டேப் ஒட்டப்பட்டுள்ளது. கைதான 3 பேரும் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உடல் மிதந்தது.

போலீஸ் விசாரணை
இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினரான தொழிலதிபர் சிவமூர்த்தி கடத்தி கொலை செய்யப்பட்டு உடல் அணையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications