For Daily Alerts
Just In
ஈரோடு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து- 4 பெண்கள் உட்பட 6 பேர் பலி
அவினாசி: ஈரோடு அவினாசி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அவினாசி அருகே பழங்கரை என்ற இடத்தில் மனநிலை பாதித்த ஒருவர் பேருந்தின் குறுக்கே வந்திருக்கிறார்.
அந்த நபர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டிருக்கிறார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் மனநிலை பாதித்த நபர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Six persons were killed and 20 injured near Erode on Tuesday morning.