Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழக கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மட்டக்கடை புதுத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான நாட்டு படகில் கடந்த 25ம் தேதி மீனவர்கள் 7 பேர் திரேஸ்புரத்தில் இருந்து வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

SL navy arrests 7 Tuticorin fishermen in mid sea

28ம் தேதி மாலை அவர்கள் கடலில் நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து பிடித்துளளது. இதில் ரோபிஸ்டன், நஜிம்கான், ரீகன், மில்டன், பிரஸ்சோவ், ரோமன்டோ, ஆகிய 7 பேரை இலங்கை கடற்படையும், கடலோர காவல் படையம் இணைந்து பிடித்து சென்றுள்ளது. அவர்களை புத்தளத்தில் உளள இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைத்துள்ளனர்.

இதற்கிடையே இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் தங்களது கல்பிட்டினா துறைமுகத்தின் அருகே உள்ள புத்தலன் குண்டுவா என்ற கடல் பகுதியில் 10 கடல் மைல் தொலைவில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 500 கிலோ மீன்களும், 3 ஜிபிஎஸ் கருவிகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் நேற்று மாலை தமிழக மீன்வளத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து்ள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+