எப்போதும் 2 விரல்களை காட்டும் ஜெ. ஏதும் சொல்லாமலேயே போய்விட்டார்: சாலமன் பாப்பையா
சென்னை: எப்போதும் இரு விரல்களைக் காட்டிச் செல்லும் ஜெயலலிதா இன்று ஏதும் சொல்லாமலேயே புறப்பட்டுப் போய் விட்டார் என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா குறித்து பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா கூறுகையில்,
அப்பல்லோ மருத்துவமனை வீதிகளில் தவம் கிடந்த மக்கள் உறங்கியும் உறங்காமலும், உடுத்தியும் உடுக்காமலும், கடந்த 2 நாட்களாக ஏக்கம் நிறைந்த விழிகளோடும் எதிர்பார்ப்பு நிறைந்த இதயத்தோடும் நெஞ்சில் அடித்தும் தலையில் அடித்தும், முகம் சிவந்து விழிகள் அழுது, கலங்கிப் புரண்டு கிடந்த காட்சி எவரையும் உலுக்கிவிடும்.
இப்படி ஒரு தலைவர் இந்த மண்ணில் அரசியல் நடத்தி திரைத்துறை ஒரு சகாப்தமாக பல்வேறு மொழிகளிலும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி, தமிழகத்தின் நகரங்களிலும், கிராமங்களிலும் சிறார்களையும், இளைஞர்களையும், வயது முதிர்ந்தவர்களையும், பெண்களையும் தன் வயப்படுத்தி வாழ்ந்து மறைந்த ஒரு அற்புதமான ஆத்மா. எப்போதும் இரு விரல்களைக் காட்டிச் செல்லும் அவர் இன்று ஏதும் சொல்லாமலேயே புறப்பட்டுப் போய் விட்டார்.
தமிழகத்தில் அவர் பதித்த தடம் எந்தத் துறையாக இருந்தாலும் அந்த தடம் அரசியல் தடம், கலைத்தடம் எல்லாம் அவரது பெயரைச் சொல்லிக் கொண்டு நிற்கும். தமிழக மக்கள் அவரது பெயரை வரலாற்றில் பதிவு செய்து கொள்வார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications