வீடு விட்டு தாவி 50 பெண்களை பலாத்காரம் செய்த "குரங்கு" மனிதன்.. பகீர் தகவல்கள்!

சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த நபர் அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஏழரை சனி...சோதனை வந்தாலும் நன்மைதான்!

    சென்னை: சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த குரங்கு மனிதனிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதன் அறிவழகன் (28). பிஎஸ்சி கணிதம் படித்த அறிவழகன். இவர் கிண்டி மடுவின்கரை பகுதியில் தங்கியிருந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்துள்ளதார். இதேபோல் 50 பெண்களைய பலாத்காரம் செய்துள்ளார்.

    தண்ணீர் கேட்பது

    தண்ணீர் கேட்பது

    வீட்டுக்கு தனியாக இருக்கும் பெண்கள் கதவை திறப்பதற்காக அவர்கள் வீட்டு கதவை தட்டி தண்ணீர் கேட்பார். அந்த பெண் உள்ளே சென்று தண்ணீர் எடுப்பதற்குள் வீட்டுக்கு நுழைந்து கதவை தாழிட்டு கொண்டு பெண்களை பலாத்காரம் செய்தார்.

    பெண் புகார்

    பெண் புகார்

    வீட்டுக்குள் வெளியே இருக்கும் குழாயை திறந்து விடுவதன் மூலம் பெண்களை வரவழைத்து நைசாக வீட்டினுள் நுழைந்தும் பலாத்கார செயல்களில் ஈடுபட்டுள்ளார். வேளச்சேரியில் உள்ள ஒரு பெண் அங்குள்ள போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த இளைஞரை 18-ஆம் தேதி கைது செய்தனர்.

    திடுக் தகவல்

    திடுக் தகவல்

    புழல் சிறையில் உள்ள மதன் அறிவழகனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மாடி விட்டு மாடி தாவி சென்றும் தனியாக வீட்டினுள் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்ததாகவும், அவர்களை பலாத்காரம் செய்யும் போது வீடியோ எடுத்து கொண்டு மீண்டும் தன்னுடைய இச்சைக்கு அவர்களை இணங்க வைத்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    சென்னையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை, கத்திமுனையில் மர்மநபர் ஒருவர் பாலியல் பலாத்காரம், நகை பறிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. விசாரணையில், கிண்டி மடுவின்கரை பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்ற இளைஞனே, இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 2 மாதங்களுக்கு முன்பே, அறிவழிகனின் செயல்கள் குறித்து, ஈக்காட்டுத்தாங்கல் பகுதி மக்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+