ஆந்திர கனமழை எதிரொலி... நவம்பர் 20, 22 தேதிகளில் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
சென்னை: ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இணை ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இன்று துவங்கி, நவம்பர் 22 வரை, ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

நவம்பர் 20ம் தேதி ரத்தாகும் ரயில்கள்
ரயில் எண் 12269: சென்னை சென்ட்ரல் - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் துரந்தோ விரைவு ரயில்
ரயில் எண் 12829: சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில்
ரயில் எண் 02842: சென்னை சென்ட்ரல் - சாந்த்ராகாச்சி வாராந்திர விரைவு ரயில்
நவம்பர் 21ம் தேதி ரத்து
ரயில் எண் 22641: திருவனந்தபுரம் - மேற்கு வங்கம், சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில்
திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 21 மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 16359: எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ( வழி காட்பாடி, ரேணிகுண்டா) ரயிலும் நவம்பர் 21ம் தேதி ரத்து செய்யப்படவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 21ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 22 ம் தேதி ரயில் புறப்பட இருந்த ரயில் எண் 22620 : நெல்லை - சத்தீஸ்கர், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
கனமழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இணை ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், மேலும் பல ரயில்கள் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications