வலுவடையும் தென்மேற்கு பருவமழை... அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகவும் அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகவும் அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றிலிருந்து இது தீவிரமடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் அவ்வப்போது பெய்கிறது. இனி தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சமயங்களில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும.நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications