For Daily Alerts
Just In
அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் திருட்டு!
சென்னை: அமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
பாடகர் பாலசுப்பிரமணியம் கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு தற்போது பயணித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹவுஸ்டனி்ல் உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அதன்பின்னர் புதிய பாஸ்போர்ட் பெற்று இந்தியா திரும்பியதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.
English summary
singer S. P. Balasubrahmanyam passport, money theft in us