சட்டசபைக்குள் கலவரம்..கொந்தளிப்பைப் பார்த்து ஓடிய சபாநாயகர் தனபால்!
தமிழக சட்டசபையில் இன்று நடந்த பெரும் கொந்தளிப்பைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் அங்கிருந்து போய் விட்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் இன்று பெரும் கலவரம் வெடித்தது. சபாநாயகரின் இருக்கையும் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து சபாநயாகர் தனபால் அவையை ஒத்திவைத்து விட்டு போய் விட்டார்.
தமிழகசட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தது. ஆனால் வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவும், ஓ.பி.எஸ் அணியும், காங்கிரஸும் வலியுறுத்தின. ஆனால் அதை சபாநாயகர் கேட்கவே இல்லை தொடர்ந்த மறுத்து வந்தார்.

இதையடுத்து திமுகவினரும், காங்கிரஸாரும், ஓபிஎஸ் அணியினரும் கொந்தளித்தனர். சபாநாயகர் முன்பு கூடி போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து கலவரம் வெடித்தது. சபாநாயகர் இருக்கை தாக்கப்பட்டது. நாற்காலிகளைத் தூக்கி வீசினர்.
இதையடுத்து பிற்பகல் 1 மணி வரை சபையை ஒத்திவைத்து விட்டு அங்கிருந்து போய் விட்டார் சபாநாயகர் தனபால்.












Click it and Unblock the Notifications