எனக்கு வருத்தம்ப்பா.. ஏன் இப்படி செஞ்சீங்கனு ஒரு வார்த்தை கேட்டாரா? எடப்பாடி செயலால் சபாநாயகர் கோபம்
சென்னை: சட்டப்பேரவையில் இருந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், "அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று சபாநாயகர் அப்பாவு சற்று கோபமாகப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசும்போது முதல்வர் ஸ்டாலின் எழுந்து போகாமல் கவனித்ததைச் சுட்டிக்காட்டி, அதிமுகவினரை விமர்சித்தார் சபாநாயகர் அப்பாவு.

சட்டசபை விவாதம் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர் சிங் ஐபிஎஸ், கோடநாடு கொலை கொள்ளை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்றும் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசத் தொடங்கினார். முதல்வர் பதிலுரையின் போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுகவினருக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக வெளிநடப்பு : இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சட்டமன்ற உரையை நேரலை செய்யாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததற்கு சபாநாயகர் அப்பாவு வருத்தம் தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம். அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது. படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது இரண்டு மணி நேரம் உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல் முதலமைச்சர் அமர்ந்திருந்தார்.
சபாநாயகர் கோபம் : இப்படி ஏன் செய்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட செல்லாமல் இருக்கக்கூடிய முதலமைச்சர் நமது முதலமைச்சர். அவையை விட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்றது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சட்டப்பேரவையில் அதிமுகவினர் செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications