18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு.. முதல்வருடன் சபாநாயகர் தனபால் திடீர் சந்திப்பு.. ஓபிஎஸ்சும் பங்கேற்பு
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சபாநாயகர் தனபால் திடீர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பு அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் சபாநாயகர் தனபால் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.
இந்த கூட்டத்தில் 18 எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக இவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.