ஆர்.கே. நகரில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா பொறுப்பேற்பு
ஆர்.கே.நகருக்கான சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை: ஆர்.கே.நகருக்கான சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட விக்ரம் பத்ரா தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் நாளுக்கு நாள் பணம் விநியோகங்கள் அதிகரித்துவருகின்றன.இதனால் பறக்கும் படை அதிகாரிகள் கட்சியினரை கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா இன்று பொறுப்பேற்பு கொண்டார். அவர் தலைமை தேர்தல் ஆணையத்தின் செலவீன இயக்குநராக உள்ளார். அவர் தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications