வெற்றி உங்கள் கையில்: பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு வரும் மார்ச் தொடங்க இருக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் மும்முரமாக தயார் ஆகி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பள்ளிக் கல்வி துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முதன்மை கல்வி அலுவலர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

students

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வெவ்வேறு பகுதிகளில் பணிபுரியும் அனுபவம் மிக்க சிறப்பு நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சியும், வழிகாட்டுதலும் அளிக்க வேண்டும்.

முந்தைய ஆண்டுகளில் நடந்த பொது தேர்வு வினாத்தாள்களை கொண்டு மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாள்களை பயிற்சி அளித்தல், மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவ, மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை வழங்க வேண்டும்.

பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுக்கவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் வெற்றி உங்கள் கையில் என்ற புதிய திட்டத்தை ஒவ்வொரு பள்ளியிலும் திறம்பட செயல்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+