ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட சிறப்பு பார்வையாளர் திருச்சி வருகை!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி இன்று திருச்சி வந்தடைந்தார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு, கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தால் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை பார்வையிட சிறப்பு பார்வையாளராக அனில்குமார், பொதுப்பார்வையாளராக பால்கர்சிங், காவல் பார்வையாளராக பினோத்குமார், செலவினப் பார்வை யாளராக ஸ்ரீதர் டோரா ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட போயம் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திருச்சி வந்தடைந்துள்ளார். 16-ந் தேதியன்று நடைபெறுகின்ற வாக்கு எண்ணிக்கையினை அவர் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications