வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில்ல போகலாம்
சென்னை: பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா திருவிழாவைக்காண செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
ரயில் எண் 06069: சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும்.
ரயில் எண் 06070: வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 30ம் தேதி நள்ளிரவு 12.15 மணிக்குப் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
ரயில் எண் 06073: நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ரயில் எண் 06074: வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.