கரூர் மாவட்ட பாமக உடைந்தது! வேல்முருகன் கட்சியில் இணைந்தார் மா.செ ஆசீம்கான்!!
கோயம்புத்தூர்: கரூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பிளவுபட்டுள்ளது. கரூர் மாவட்ட பாமக செயலாளர் ஆசீம் கான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தி. வேல்முருகன். கடந்த 2011ஆம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அக்கட்சியை விட்டு வெளியேறினார்.

பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பாமகவில் இருந்த மூத்த தலைவர்கள் காவேரி, காமராசு, எஸ்.எம். சண்முகம் உள்ளிட்டோர் வேல்முருகன் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமை சார்ந்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் வேல்முருகன். அண்மையில் கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்களுக்கு எதிராக 65 அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளை தமிழக வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு மூலம் அவர் ஒருங்கிணைத்திருந்தார்.
இதன் பின்னர் புலிப்பார்வை படத்தில் காட்சிகளை மாற்றி அமைப்போம் என்று வேந்தர் மூவிஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆசீம்கான் இன்று வேல்முருகனை நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications