பருவ மழை கேரளாவில் தொடங்கி விட்டது... வானி்லை மையம் குழப்புவதாக சொல்கிறார் எஸ்.ஆர்.பி!
கோவை: தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக வானிலை மையம் மக்களைக் குழப்பி வருகிறது என்று கூறியுள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக சில கருத்துக்களைக் கூறினார். வழக்கமாக அரசியல்வாதிகள் இதுபோல பேசுவதில்லை என்பதால் எஸ்.ஆர்.பியின் பேச்சு ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

எஸ்.ஆர்.பி கூறுகையில் தென் மேற்குப் பருவ மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மக்களைக் குழப்பம் வகையில் தகவல்களை கூறி வருகிறது. முதலில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவித்தார்கள். பிறகு ஜூன் 7ம் தேதி தொடங்கும் என்றார்கள். இப்போது ஜூன் 9ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளனர்.
உண்மையில் கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை ஏற்கனவே தொடங்கி விட்டது. அங்கு மழை பெய்து வருகிறது என்றார் எஸ்.ஆர்.பி. மழை தொடர்பாக வானிலை மையம் குழப்புவதாக மூத்த அரசியல் தலைவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கண்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் சிக்கியது தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார் எஸ்.ஆர்.பி. இதுகுறித்து அவர் கூறுகையில், கோவையில் ரூ. 5670 கோடி பணம் கிடைத்தது தொடர்பாக எந்தவிதமான விசாரணை நடந்தாலும் அதை நாங்கள் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது முழுக்க முழுக்க வங்கியின் பணம். அது தங்களுடைய பணம் என்று ஸ்டேட் பாங்க் கூறி விட்டது. எனவே இதுதொடர்பாக யார் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். அது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார் அவர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications