இலங்கைச் சிறையிலிருந்த 46 தமிழ் மீனவர்கள் விடுதலை!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 46 பேரை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 18ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 11 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 46 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Sri Lanka releases 46 Tamil fishermen

இந்நிலையில், இன்று (25ஆம் தேதி) ஊர்க்காவல் துறை மற்றும் மன்னார் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 46 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் விடுவிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் உடனடியாக இந்திய கடற்படையிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பபட்டது.

இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, படகுகளை விடுவிப்பது குறித்து நாளை மறுதினம் (27ஆம் தேதி) முடிவெடுக்கப்படும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக மீனவர்கள் 46 பேரும் நாளை அல்லது நாளை மறுதினம் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+