இலங்கை கடற்படை அட்டூழியம்: நாகை மீனவர்கள் 8 பேர் கைது: படகுகளும் சிறைபிடிப்பு
வேதாரண்யம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரையும் அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சின்னையன் (45), வசந்தராஜன் (19), ராசேந்திரன் (45), வேலு (65). கோடியக்கரையில் தாற்காலிகமாகத் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் நால்வரும் கோடியக்கரை படகுத்துறையில் இருந்து கண்ணாடியிழை படகு ஒன்றில் செவ்வாய்க்கிழமை பகல் கடலுக்குச் சென்றனர். இதேபோல, வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் பாலமுருகன் (25), குட்டியாண்டி (45), கவிநேசன் (20), ராசேந்திரன் (45) ஆகிய நால்வரும் ஆறுகாட்டுத்துறையில் இருந்து மற்றொரு கண்ணாடியிழை படகில் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புதன்கிழமை காலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 8 பேரையும் அவர்களது படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்புப் பிரிவு போலீஸார், மீன்வளத் துறையினர் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறையில் விசாரணை மேற்கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications