இலங்கை கடற்படை அட்டகாசம்: தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 109 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 241 விசைப்படகுகளிலும் 1, 400 மீனவர்கள் சனிக்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்க கிளம்பினர்.
இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கலைமதி என்பவரின் விசைப்படகில் இருந்த விக்னேஷ், பழனி, மணிகண்டன், செல்வநாதன், திலீப் ஆகியோரும், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஜான்பீட்டரின் படகில் இருந்த கோட்டைச்சாமி, மெரிட்சன், ஜெமினி, பரமசிவம் ஆகியோரும் நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த 9 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகு 9 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
9 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது வேதனை அளிப்பதாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க தலைவர் குட்டியாண்டி தெரிவித்துள்ளார். இதுவரை சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications