34 ஆண்டுகள் அடக்கி வைத்திருந்த பாசம் – குடும்பத்துடன் இணைந்த இலங்கை அகதி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளில் ஒருவர் 34 ஆண்டுகள் கழித்து தன்னுடைய குடும்பத்தினரைச் சந்தித்த சம்பவம் அங்கு அனைவர் மனதையும் உருக்கி உள்ளது.
குமரியில் ஏராளமான இலங்கை அகதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பலரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இலங்கையில் வசிக்கிறார்கள்.
இலங்கையில் நடந்த இன கலவரத்தின்போது குடும்பத்தினரை பிரிந்து தமிழகம் வந்து வசிக்கும் அகதிகளில் பலருக்கு இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பே இல்லாத நிலை நிலவுகிறது.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம்:
இந்த நிலையில் இது போன்ற இலங்கை அகதிகளுக்கும் இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்களுக்கும் மீண்டும் உறவை ஏற்படுத்தி கொடுத்து உதவ இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
குமரி மாவட்ட அகதிகள்:
இதைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் உதவியுடன் குமரி மாவட்ட இலங்கை அகதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
34 ஆண்டுகள் கழித்து:
இதன் முதல்படியாக ஞாறாவிளை அகதிகள் முகாமில் 34 ஆண்டுகளாக தனியாக உறவினர்களை பிரிந்து வசித்து வந்த இந்திராணி என்ற பெண் அகதியின் உறவினர்களை கண்டு பிடித்து அவர்களை குமரி மாவட்டம் வரவழைத்தனர்.
கண்ணீர் சொன்ன கதை:
பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட அந்த அகதிகள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
சந்திக்க வைத்தவர்களுக்கு நன்றி:
தங்கள் சந்திப்பு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கும், செஞ்சிலுவை சங்கத்திற்கும் உளமாற நன்றி கூறினார்கள். இச்சந்திப்பு அங்கிருந்த அனைவரது மனதையும் உருக்கியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications