மோடி ஸ்டைலில் எல்.ஈ.டி ஸ்கிரீன் பிரச்சாரம்- ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் பரபர.....
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் கலாட்டாக்கள் பல்வேறு வகையில் சூடுபிடித்து வரும் நிலையில் தமிழக பாஜகவினர் மோடி ஸ்டைலில் பெரிய எல்.ஈ.டி ஸ்கிரீன் வைத்து பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் ஆளும் அண்ணா தி.மு.க, தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் களம் இறங்கியுள்ளன.

ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் பிரசார களத்தில் அனல் பறக்கிறது. இத்தொகுதியில் பாஜக சார்பில் எம்.சுப்ரமணியம் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவர் மீது தொடக்கம் முதலே பல்வேறு சர்ச்சைகள் புகார்கள் கொடிகட்டிப் பறந்தன.
இருப்பினும் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு தலைவர்கள் அவருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் பாணியில் பெரிய, பெரிய எலக்ட்ரானிக் ஸ்கிரீன்களை குக்கிராம மேடைகளிலும் அமைத்து, பிரசாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications