புழல் சிறையிலிருந்து 16 இலங்கை மீனவர்கள் விடுதலை – தமிழக அரசு உத்தரவு
சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 இலங்கை மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது தமிழக அரசு. இதனடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு-ஆந்திரா கடலோர பகுதிகளில் மீன்பிடித்த 7 இலங்கை மீனவர்களை கடலோர காவல்படையினர் கடந்த மாதம் 2 ஆம் தேதி கைது செய்தனர்.
அதே போல் கடந்த 1 ஆம் தேதி தமிழ்நாடு-ஆந்திரா கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த 9 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 16 இலங்கை மீனவர்களும் சென்னை புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சிறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து உரிய சான்றிதழ் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நள்ளிரவில் இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.