தமிழக மீனவர்கள் 69 பேரை விடுதலை செய்தது இலங்கை
இலங்கை சிறையில் இருக்கும் 69 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை விடுதலை செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கை சிறையில் இருக்கும் 69 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை 2-ஆம் கட்டமாக விடுதலை செய்துள்ளது.
எல்லைத்தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை இந்திய அரசும், இலங்கை அரசும் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் வாடிக்கையான ஒன்றுதான்.

அதன்படி கைது செய்யப்படுபவர்களை பேச்சுவார்த்தை நடத்தி நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதையும் இரு நாடுகளும் செய்து வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 69 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை தற்போது நல்லெண்ண அடிப்படையில் இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது. அதேபோல் மீதமுள்ள 71 மீனவர்கள் புத்தாண்டிற்குள் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications