ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் வஸ்திர மரியாதை - இன்று திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிப்பு
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது.
பூலோக வைகுண்டம் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்களுக்கு வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த வகையில் ஆனி வார விழாவை ஒட்டி திருப்பதி பெருமாளுக்கு வஸ்திர மரியாதை ரங்கநாதர் கோவில் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மன்னர்கள் ஸ்ரீரங்கத்தில் நடந்த படையெடுப்பின் போது உற்சவர் பெருமாள் விக்ரகத்தைப் பாதுகாக்கவும், எதிரிகளின் கையில் சிக்காமல் இருக்கவும் திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் கோவிலில் 50 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் தேதியன்று வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்படுகிறது.
இதை முன்னிட்டு நேற்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து வஸ்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. இதில் பெருமாள் வஸ்திரங்கள், குடைகள், மலர்கள், முக்கனிகள், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட மங்கள பொருட்கள் அனைத்தும் பெரிய தட்டுகளில் வைக்கப்பட்டு கருடாழ்வார் மண்டபத்தில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கோவில் யானை ஆண்டாள் வரவழைக்கப்பட்டு யானை மீது ஒரு வஸ்திர தட்டை வைத்தனர். மற்ற தட்டுக்களை கோவில் பணியாளர்கள், பட்டர்கள், அறங்காவலர்கள் கையில் எடுத்துக் கொண்டு நான்கு உத்திர வீதிகளில் வீதி உலா வந்தனர்.
பிறகு கோபுர வாசலை அடைந்த ஊர்வலத்திலிருந்து வஸ்திர மரியாதை சாமன்கள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று வஸ்திர மரியாதை திருப்பதி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications