எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: தத்தளிக்கும் மாணவர்கள்
சென்னை: சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வெள்ளத்தில் மிதக்கிறது.
தமிழகத்தில் திங்கட்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. சென்னை மற்றும் கடலூர் முழுவதுமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மழை நிற்க வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
#ChennaiFloods: SRM UNIVERSITY Boys Hostel being affected due to heavy rain !!
#DivyakantHere #aajtak pic.twitter.com/52xJTjbVyj
— Divyakant (@DivyakantHere) December 2, 2015 சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெள்ள நீர் புகுந்து ஆறு போன்று பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. எஸ்.ஆர். பல்கலைக்கழகம் பொத்தேரி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து திவ்யா என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Chennai port #ChennaiFloods pic.twitter.com/W8TW239Alw
— മാസ്റ്റർ ഷിഫു (@Shifu_mastr) December 2, 2015 கனமழையால் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications