10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – தேர்ச்சி விகிதம் 2 சதவீதம் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் 92.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்வாகும்.

கடந்த வருடம் 90.7 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் இந்த முறை அதை விட அதிக அளவிலான மாணவ, மாணவியர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் இந்த வருடம் சிறப்பான முறையில் உயர்ந்துள்ளது. கிட்டதட்ட 16 அரசுப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான மதிப்பெண்கள் பெற்று புதிய வரலாறும் சாதனையும் படைத்துள்ளனர்.
வழக்கம் போல இந்தமுறையும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95.94 சதவீத மாணவிகளும், 90.5 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications