எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... 94.5 சதவீதம் தேர்ச்சி.... சிவகங்கை மாவட்டம் முதலிடம்
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தன. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5456 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 3 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 91.36 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை சிவகங்கை மாவட்டம் முதல் இடத்தையும் , ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.மொத்தம் 9.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களுள் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 96.42 சதவீதமும், ஆங்கிலத்தில் 96.50 சதவீதமும், அறிவியலில் 98.47 சதவீதமும், சமூக அறிவியலில் 96.75 சதவீதமும், கணிதத்தில் 96.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
88.84 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 481 மதிப்பெண்களுக்கு மேல் 9,402 பேர் பெற்றுள்ளனர். அதுபோல் 451- 481 மதிப்பெண்கள் வரை 56,837 பேரும், 426- 450 மதிப்பெண்கள் வரை 64,144 பேரும் எடுத்துள்ளனர்.
10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications