தேர்வு எழுத வந்த ப்ளஸ்2 மாணவருக்கு கத்திக்குத்து.. சகமாணவர்கள் வெறிச்செயலால் விரல்கள் துண்டானது
மதுரை அருகே ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் மாணவரின் விரல்கள் துண்டானது.
Recommended Video

மதுரை: மேலூர் அருகே ப்ளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் மாணவரின் விரல்கள் துண்டானது.
அண்மைக் காலமாக கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் வெறித்தனமான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் கத்தி கலாச்சாரம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை மேலூர் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் மாயக்காளை- தீபா தம்பதி. இவர்களின் மகன் அர்ஜுன்.

மாணவர் அர்ஜுன்
மதுரை அருகே உள்ள திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் படித்து வருகின்றார். இன்று வணிகவியல் தேர்வு நடைபெற்றதை முன்னிட்டு அர்ஜுன் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார்.

அர்ஜுனுக்கு கத்திக்குத்து
அர்ஜுன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது சக மாணவர்களான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜூனிடம் தகராறு செய்தனர். எதிர்பாராத விதமாக அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜூனை சரமாரியாக குத்தினர்.

துண்டான விரல்கள்
கத்திக்குத்தில் இருந்து தன்னை விடுவிடுத்துக்கொள்ள முயன்ற அர்ஜுனின் கைவிரல்கள் துண்டானது. மேலும் அர்ஜூனின் தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சை
இதில் ரத்த வெள்ளத்தில் அர்ஜுன் கீழே சாய்ந்ததை பார்த்த கார்த்திக் ராஜா மற்றும் சரவணக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அர்ஜூனை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெரும் பரபரப்பு
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அர்ஜூன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிளஸ்-2 தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கத்தியால் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலைவீச்சு
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கத்திக்குத்து சம்பவத்திற்கு என்ன காரணம்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோரை மேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications