மீத்தேன் திட்டத்திற்கு நான் அனுமதி கொடுக்கல்ல.. வைகோ சொல்வது பொய்.. ஸ்டாலின் ஆவேசம்
மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கவில்லை என்று ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.
புதுக்கோட்டை: திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்த போது 2006ம் ஆண்டு மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மு.க. ஸ்டாலின் மறுத்துள்ளார்.
புதுக்கோட்டை நெடுவாசல் மக்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நேரில் சென்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.
அப்போது, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக ஆட்சிக்காலத்தில் மீத்தேன் திட்டம் கொண்டு வரப்பட்டதாக வைகோ குற்றம்சாட்டி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மு.க. ஸ்டாலின் அளித்த பதில்:

கையெழுத்து போட்டது உண்மை
மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சியின் போது அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய அரசு திட்டத்தை ஆய்வு நடத்துவதற்காக அனுமதி கேட்டது. அப்போது, அந்த ஆய்வு நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது உண்மை.

அரசியல் ஞானி வைகோ
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஆய்வுகள் மேற்கொள்ளும் போது சுற்றுசூழல் பாதிக்கப்படுமா, நன்மை என்ன தீமை என்ன என்பது தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இருக்கும். இதை எல்லாம் அரசியல் ஞானியாக இருக்கக் கூடிய வைகோ படித்துப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

விதிமுறைகள் என்ன?
மக்களுடைய கருத்துகளை கேட்க வேண்டும், ஆய்வு நடத்த வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், உள்ளிட்டவைகள் முடிந்த பின்னர்தான் மீத்தேன் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆய்வு நடத்துவதற்கு தான் நாங்கள் அனுமதி கொடுத்தோமே தவிர திட்டத்திற்கு அல்ல.

மத்திய அரசின் முடிவு
மீத்தேன் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்க முடியாது. திட்டத்தை கொண்டு வருவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசிடமே இருக்கிறது. வைகோவிற்கு என் மீது எப்போதுமே ஒரு தனி பாசம் உண்டு. அதனால்தான் என் பெயரை அடிக்கடி பயன்படுத்தி அவர் விளம்பரத்தை தேடிக்கொள்கிறார் என்று ஸ்டாலின் கூறினார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications