அரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்துகொள்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை விளாசல்
ஸ்டாலினால் அரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்து கொள்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஸ்டாலினால் அரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்து கொள்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சியை திமுக முறியடிக்கும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மற்றும் நவோதயா பள்ளிகள் மூலம் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதே பா.ஜ.க. அரசின் கொள்கை, செயல்திட்டமாக உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார்.
அதாவது தமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அரசியலில் பிழைக்க முடியாமல் போனதால் ஸ்டாலின் போன்றோர் தமிழ் பற்றாளர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்டாலினை விட பாஜகவினருக்கு தமிழ் மீது அதிக மரியாதையும் மதிப்பும் உண்டு என்றும் அவர் கூறினார். மேலும் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுக்கவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications