12 ம் வகுப்பு பொதுத்தேர்வு: கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வெற்றி பெற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழகத்தில் உள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கிறார்கள், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடையும் வகையிலும் அவர்களுடைய பெற்றோர்களும், உற்றார் உறவினர்களும், ஆசிரியர்களும் பூரிப்புக்கொள்ளும் அளவுக்கும் மாணவ, மாணவியர்கள் இந்த பொதுத் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்ற எனது வேண்டுகோளை விடுத்து, அதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள வாழ்த்து செய்தி:
மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது.
அனைத்து மாணவ, மாணவிகளும் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்திற்கு மட்டுமல்ல- நாட்டிற்கும்- ஏன் உலகத்திற்கே வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வெற்றி பெற்று, தேசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு பாடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications