Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்களின் கல்விக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் பேஸ்புக் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கல்விக்கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்கி அதிகாரிகளின் இந்த கெடுபிடி வசூல் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாணவனை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

stalin facebook statement about Student loan discounts

உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், ரிசர்வ் வங்கி உத்தரவையும் மீறி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியே இப்படி ஈவு இரக்கமற்ற முறையில் லெனின் என்ற மாணவர் குடும்பத்தினரை மிரட்டியிருப்பது வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் இப்படி அத்துமீறி நடந்து கொள்ளும் வசூல் ஏஜெண்டுகள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களுக்கு இது போன்றதொரு அவல நிலைமை வரக்கூடாது என்பதற்காகத்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் "மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் கழகத்தின் சார்பில் உறுதியளித்திருந்தோம். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டதால், திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத சூழல் உருவாகி விட்டது.

திமுக கல்விக்கடன் பெற்ற அனைத்து மாணவர்களின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்த போதிலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் "வேலை கிடைக்காத மாணவர்களின் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கையெழுத்திட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த மாநிலத்தின் எதிர்காலமாக கருதப்படும் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காட்டிய அலட்சியத்தால் மதுரை அவுனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆகவே இனியும் தாமதம் செய்யாமல் மாணவர்களின் கல்விக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். லெனின் மரணத்திற்கு காரணமான குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி இனி வசூல் ஏஜெண்டுகளை வைத்து மாணவர்கள் கடனை வசூல் செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+