குட்டையைக் குழப்பிய குலாம் நபி ஆசாத்... திமுக கூட்டணி குறித்து சு.சாமி கருத்து
சென்னை: திமுக, தேமுதிக, பாஜக கூட்டணியை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தடுத்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி.

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
பாஜக தமிழக கட்சி அல்ல. ஒரு தலைவரை நம்பி உள்ள கட்சி அல்ல. திமுக, தேமுதிக, பாஜக கூட்டணியை குலாம் நபி ஆசாத் தடுத்துவிட்டார். மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுகவின் வெற்றி நிச்சயமாகியிருக்கும்' என்றார்.
முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘திமுக ஸ்டாலினை முதலமைச்சராக களமிறக்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் திமுகவின் வெற்றி உறுதி' எனத் தெரிவித்திருந்தார் சுப்பிரமணிய சாமி.
ஆனால், இதற்கு பதில் தரும் விதமாக திமுகவின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதி தான் என ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக கூட்டணி உறுதியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications